ட்ரிப்ஸ் (TRIPS) ஒப்பந்தத்தில் தள்ளுபடி கோரும் மனுக் கடிதம்

இதை உள்ளே படியுங்கள்: English | हिंदी | தமிழ் | ಕನ್ನಡ | മലയാളം

கொரோனா வைரஸை அழிப்பதற்கான அறிவியல் செயல்முறைகளின் வளர்ச்சிக்கு பொது நிதியுதவி வழிவகுத்தது – ஆனால் இப்போது, கார்ப்பரேட் நிறுவனங்களின் சொத்துரிமைகளின் காரணமாக, அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உபகரணங்கள் அனைவருக்கும் கிடைப்பதற்கும், லட்சக்கணக்கான மக்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

அதன் காரணமாகவே பல அரசுகள் – கூட்டமைப்புகள் மற்றும் குடிமை சமூக அமைப்புகளின் ஆதரவுடன் – கோவிட்-19 தடுப்பூசிகள், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றின் மீதான தனியார் காப்புரிமைகளை தள்ளுபடி செய்யுமாறு உலக வர்த்தக அமைப்பிற்கு (WTO) கோரிக்கை விடுத்துள்ளன (அதாவது TRIPS தள்ளுபடி). ஆனால் G7 எனப்படும் ஏழு நாடுகளின் குழு மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பும் இந்த கோரிக்கையை எதிர்க்கின்றன.

தனியார் லாபத்தினைக் காட்டிலும் பொது நலனுக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அவர்களுக்கு தெரியப்படுத்த இந்த மனுவில் கையொப்பமிடவும்.

ட்ரிப்ஸ் (TRIPS) தள்ளுபடி குறித்து மேலும் படிக்க:

Video

Civil society and trade unions from the Global South are calling on rich countries’ leaders to stop blocking a proposal to waive vaccine patents.

Monopoly patents or vaccines for all? [Tamil subtitles]

அன்புள்ள [G7 / ஐரோப்பிய கூட்டமைப்பின் நாடுகளின்] தலைவர்களுக்கு,

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவில் கோவிட் பெருந்தொற்று பணிகளில் ஈடுபட்டுள்ள முன்கள சுகாதார பணியாளர்களாகிய நாங்கள், தினம்தோரும் கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுவருகிறோம்; மக்கள் இறுதி மூச்சு விடுவதையும், குடும்பங்கள் சிதறுவதையும் வலியுடன் காண நேர்கிறது. எங்கள் சக சுகாதார பணியாளர்களும் இறக்கிறார்கள்.

[G7 / ஐரோப்பிய கூட்டமைப்பின் நாடுகளில்] உள்ள பல சுகாதார பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களும் பல இன்னல்களை சந்தித்ததை நாங்கள் அறிவோம். அவர்களுடன் நாங்களும் அவர்களின் துக்கத்தினை பகிர்கின்றோம்.

இருந்தபோதும், [G7 / ஐரோப்பிய கூட்டமைப்பின் நாடுகளில்] உள்ள மக்களுக்கு தற்போது கிடைத்துள்ள நம்பிக்கை உணர்வினை எங்களால் பகிர்ந்து உணர முடியவில்லை, ஏனெனில் உயிர் காக்கும் மருந்துகள் அங்கு மட்டுமே விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

[G7 / ஐரோப்பிய கூட்டமைப்பின் நாடுகளில்] உள்ள அனைத்து மக்கள் தொகையின் தேவைக்கும் அதிகமான தடுப்பூசிகள் இருக்கையில்¸ ஏழை நாடுகளில் உள்ள மக்களில் 10-ல் 9 பேர் இந்த ஆண்டு தடுப்பூசி கிடைக்காமல் தவிக்கின்றனர். சுகாதார பணியாளர்களாக அனைத்து மக்களின் உயிர்களையும் காக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. ஆனால் எங்கள் மக்கள் தான் தடுப்பூசியை பெறுவதற்கான வரிசையில் கடைசியில் நிற்கிறார்கள்.

எங்கள் நாடுகளில் உள்ள நிறைய நிறுவனங்கள் ஏற்கனவே கோவிட் 19 தடுப்பூசிகளை உற்பத்தி செய்கின்றன. ஆனால் மேலும் அதிக உயிர்களை காக்கும் வகையில், அதிக உற்பத்தித்திறனைக் கொண்ட, அதிக திறமைகளைக் கொண்ட உற்பத்தியாளர்கள் எங்கள் நாட்டிலும், இதர வளர்ந்து வரும் நாடுகளிலும் நிறைய உள்ளார்கள். [G7 / ஐரோப்பிய கூட்டமைப்பு] அரசாங்கம் அத்தகைய உற்பத்தியை மேற்கொள்ளும் முயற்சிகளை வெளிப்படையாக தடுப்பது எங்களுக்கு பெரும் வேதனையை அளிக்கிறது.

எங்களது அரசுகள், நிறுவனங்களின் தனி சொத்துரிமைகள் குறித்த விதிகளில் ஒரு தற்காலிகமான தள்ளுபடியினை வேண்டி கோரிக்கையை முன்வைத்துள்ளன. அதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள தகுதிவாய்ந்த உற்பத்தியாளர்களால் அதிக அளவில் தடுப்பூசிகளையும், கோவிட் தொடர்பான இதர சுகாதார தொழில்நுட்பங்களான சிகிச்சை முறைகள் மற்றும் பரிசோதனை முறைகளையும் உற்பத்தி செய்ய முடியும். இருந்தபோதும், [G7 / ஐரோப்பிய கூட்டமைப்பு] நாடுகள் இதனை ஆதரிக்க மறுக்கின்றன. குறிப்பிட்ட சில மருந்து நிறுவனங்கள் மட்டுமே தடுப்பூசி தொடர்பான அறிவினை கொண்டிருப்பதற்கு அந்நாடுகள் அனுமதிக்கின்றன. அந்நிறுவனங்களே, யார் வாழவேண்டும், யார் சாக வேண்டும் என்பதை தீர்மானிக்கின்றனர்.

[இந்த வாரம் நிகழவுள்ள G7 மாநாட்டில் பங்கேற்க எங்கள் அரசாங்கங்களில் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருக்கும் இந்த சூழலில், முன்களத்தில் நின்று போராடும் எங்களது குரல்களையும் கூட நீங்கள் கேட்க வேண்டுமென நாங்கள் விரும்புகின்றோம்]

எங்களது இந்த இக்கட்டான உயிர் போகும் சூழலில், எங்கள் தேவையை புறக்கணித்து, எங்களை லட்சக்கணக்கில் கொலை செய்யும் வாய்ப்பினை தங்கள் கைகளில் கொண்ட மருந்து நிறுவனங்களின் ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவளித்து நிற்க எப்படி [G7 / ஐரோப்பிய கூட்டமைப்பு] அரசுகளால் முடிகிறது? உங்கள் போக்கினை மாற்றிக்கொள்ள நாங்கள் கோருகிறோம், தயவுசெய்து உடனடியாக எங்கள் அரசாங்கங்கள் முன்வைக்கும் நிறுவனங்களின் தனி சொத்துரிமைகள் குறித்த விலக்குகளை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் எங்கள் வேதனை நீட்டிக்கப்படுகிறது என்பதை உணருங்கள்.

*குறிப்பு: உலக வணிக அமைப்பில் ட்ரிப்ஸ் (TRIPS) தள்ளுபடி செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையினை ஆதரிக்காத மற்ற அரசுகளுக்கும் இந்த கடிதமானது பொருந்துவதால், அவற்றிற்கும் இம்மனு அளிக்கப்படலாம்.

Don't miss our updates

Receive the latest updates in your inbox

Subscribe